லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு நேர்ந்த கதி!! பொதுமக்கள் எடுத்த அதிரடி முடிவு!!
VAO arrest
அரக்கோணம் தாலுகாவில் உள்ள மோசூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவருக்கு லோகநாதன் மற்றும் பாலகிருஷ்ணன் என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமலிங்கம் இறந்துவிட்டார்.
இதனால் அவருடைய மகன்கள் இருவரும் ராமலிங்கம் பெயரில் உள்ள சொத்துக்களின் பட்டாவை பெயர் மாற்றம் செய்வதற்காக மோசூர் கிராம நிர்வாக அலுவலர் திவாகரிடம் கேட்டுள்ளனர்.
அப்போது திவாகர் பட்டா பெயர் மாற்றம் செய்துதர வேண்டுமானால் ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் பேரம் பேசி ரூ.10 ஆயிரம் தருவதாக லோகநாதன் கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத லோகநாதன், இதுகுறித்து வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். பின்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்து அனுப்பியுள்ளனர்.
லோகநாதன், கிராம நிர்வாக அலுவலர் திவாகரை தொடர்பு கொண்டு பணம் கொடுக்க எங்கு வர வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், வேலை செய்யும் அலுவலகத்தில் வந்து பணத்தை கொடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து லோகநாதன், கிராம நிர்வாக அலுவலர் திவாகரிடம் ரூ.10 ஆயிரத்தை கொடுத்த போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திவாகரை சுற்றி வளைத்து கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.