"திமுக கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டோம்" என அக்னி மீது சத்தியம் செய்த வன்னிய மக்கள்!! திக்குமுக்காடிய ஸ்டாலின்!!
vanniyar youth says dont vote for dmk
தொடர்ந்து வன்னிய பெண்களையும், வன்னியர்களின் குலதெய்வமான திரௌபதி அம்மனையும் விசிக தலைவர் திருமாவளவன் மிகவும் மோசமாக விமர்சித்து வந்த நிலையில், விசிகவுடன் திமுக கூட்டணி வைத்ததில் வன்னிய சமூகத்தினர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
அவர்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக திமுக கூட்டணியை தோல்வியடையச் செய்வோம் என நெருப்பின் மீது சத்தியம் செய்து சபதம் செய்து உள்ளனர். இந்நிகழ்ச்சி நேற்று பெரம்பூர் பழனி ஆண்டவர் கோவில் தெருவில் இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இதில் 500 க்கும் மேற்பட்ட வன்னிய இளைஞர்கள் பங்கேற்று பின்வரும் வாக்குறுதிகளை கூறி அக்கினியின் மீது சபதம் எடுத்துள்ளனர்.
இந்து மதத்தை இழிவு செய்யும் திமுகவை புறக்கணிப்போம்.
சூரிய குல க்ஷத்ரியரான ராமரை நிந்தனை செய்த திமுகவை புறக்கணிப்போம்
சந்திர குல க்ஷத்திரியரான கிருஷ்ணரை இழிவு செய்யும் வீரமணியை ஆதரிக்கும் திமுகவை புறக்கணிப்போம்
வன்னியர்களின் குல தெய்வம் திரௌபதி அம்மனை இழிவு செய்த திருமாவளவனை ஆதரிக்கும் திமுக வை புறக்கணிப்போம்
இந்து என்றால் திருடன் என்று தப்பு தப்பாய் அர்த்தம் சொன்ன கருணாநிதியின் திமுகவை புறக்கணிப்போம்
இந்துக்களின் திருமண சடங்கை கொச்சைப்படுத்தும் முக ஸ்டாலினின் திமுகவை புறக்கணிப்போம்
ஏழுமலையானை இழிவாக பேசிய கனிமொழியையும் திமுகவையும் புறக்கணிப்போம்." என உறுதியேற்றனர்.
இந்த நிகழ்வு வன்னியர் அதிகம் வாழும் வடதமிழகத்தில் அதிக தொகுதியில் போட்டியிடும் திமுகவிற்கு பயத்தை உண்டுபண்ணியுள்ளதாக தெரிகிறது. வன்னிய சமூகத்தினரின் உழைப்பில் வளர்ந்த திமுக அவர்களை பழித்ததாலேயே அழிய போகிறது. இனி திமுக தனது வாக்கு வங்கியை கைப்பற்ற வேண்டுமானால் பெண்களை இழிவு படுத்தும் விசிகவை வெளியேற்றினால் மட்டும் தான் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
English Summary
vanniyar youth says dont vote for dmk