"பிரதமருடன் எனக்கு தனிப்பட்ட விருப்பு ,வெறுப்பு ஏதுமில்லை" அந்தர் பல்டி அடிக்கும் வைகோ!!  - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் 'சமுதாய நலனுக்காக  போராடிய முகிலன் காணாமல் போனது குறித்து ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

முகிலன் காணாமல் போவதற்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாக கூறியுள்ளார். இதன் பின்னரே அவர் காணாமல் போய் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதல் வியக்கத்தக்கது. இந்திய மக்கள் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

திமுகவில் பாராளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தேமுதிக இந்த கூட்டணியில் இடம் பெறுமா என்பதை நான் கூற முடியாது. பிரதமர் மோடி வருகிற 6ம் தேதி தமிழகம் வருகிறார். பிரதமருடன் எனக்கு தனிப்பட்ட விருப்பு ,வெறுப்பு ஏதுமில்லை.  

அவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு அல்லது மாநாட்டிற்கு வந்தால் ஜனநாயகத்தை மதித்து நான் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன். ஆனால், அவர் அரசு விழாக்களில் கலந்துகொள்ள வருகிறார். எனவே, அவருக்கு எதிராக நிச்சயமாக நான் கறுப்புக்கொடி போராட்டம் மேற்கொள்வேன்." என கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaiko says about PmModi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->