வைகோவை அசிங்கபடுத்திய திமுகவினர்!! பாதியிலேயே ஓட்டம் பிடித்த வைகோ!!  - Seithipunal
Seithipunal


மதிமுக பொதுச்செயலர் வைகோ, கடையநல்லூர் அருகே பிரச்சாரம் செய்ய முனைந்தார், அப்போது அந்த பிரச்சாரத்தை திமுகவினர் புறக்கணித்தது கூட்டணி கட்சி தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடியில் தென்காசி பாராளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளரான தனுஷ் குமாரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார். வைகோ பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது திமுக கொடிகள், பேனர்கள் ஏதும் அங்கு வைக்கப்படவில்லை.

Related image

பிரச்சாரத்தை கேட்க அந்த ஆட்களும் கொடுத்த காசுக்கு சிறிதுநேரம் என்று விட்டு பாதியிலேயே புறப்பட, வைகோவிற்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு அங்கிருந்து அவசரமாக புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இவ்வாறு தென்காசி மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ செய்த பிரச்சாரத்தை திமுகவினர் புறக்கணித்தது, இரு கட்சி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaiko campaign ignored by dmk


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->