எடப்பாடி பாலுக்கும் காவலன், பூனைக்கும் தோழன்!! வைகோ பழமொழி!!  - Seithipunal
Seithipunal


இன்று திருநெல்வேலியில், திருமண விழா ஒன்றில் கலந்துகொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பின்னர் செய்தியாளர்களிடம், " பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார். 

உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு  நடந்து வருகிறது. இதுபற்றி என்னை பேச அனுமதிக்கவில்லை. மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் ஆலையை திறக்க மறைமுகமாக ஒத்துழைப்பு கொடுக்கிறது. 

உச்சநீதிமன்றத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அரசு வக்கீல்கள் இதுகுறித்து  எந்த விவரங்களையும் எடுத்து கூறவில்லை. அமைச்சரவையை கூட்டி தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட  முடிவெடுக்கவில்லை.

எடப்பாடி பாலுக்கும் காவலன், பூனைக்கும் தோழன் என செயல்பட்டு கொண்டிருக்கிறார். அணை பாதுகாப்பு மசோதா தமிழகத்திற்கு பின்னடைவு ஏற்படுத்தும். நதிநீர் உரிமை தமிழகத்தில் பறிக்கப்படும்.

பணம் கொடுத்து வாக்குகளை வாங்க பாஜக திட்ட மிடுகிறது. மோடி எப்போது தமிழகம் வந்தாலும் நாங்கள் கருப்பு கொடி போராட்டம் நடத்துவோம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaiko blames edapadi palanisamy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->