கர்ப்பிணி பெண்ணை மீட்க படிக்கட்டுகளாக மாறிய இரு காவலர்கள்! குவியும் பாராட்டுக்கள்!!
கர்ப்பிணி பெண்ணை மீட்க படிக்கட்டுகளாக மாறிய இரு காவலர்கள்! குவியும் பாராட்டுக்கள்!!
தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் ஒன்று, சிக்னல் கோளாறு காரணமாக கோட்டை மற்றும் பூங்கா ரெயில் நிலையங்களின் இடையே பாதி வழியில் நின்றுவிட்டது.
இதனையடுத்து, பெரும்பாலான பயணிகள் இறங்கிய நிலையில், படிகள் உயரமாக இருந்ததால், கர்ப்பிணி பெண் அமுதா மற்றும் முதியவர்கள் சிலர் கீழே இறங்க முடியாமல் 2 மணி நேரமாக ரயிலில் தவித்து உள்ளனர்.
இதையடுத்து, தமிழக காவல் துறையை சேர்ந்த தனசேகரன், மணிகண்டன் ஆகியோர், அமுதா கீழே இறங்குவதற்காக ரயில் பெட்டி வாசலில் இரு காவலர்களும் படிக்கட்டு போல குனிந்து கொண்டு, தங்கள் முதுகின் மீது அவரை இறங்க செய்தனர்.
காவலர்களின் இந்த மனித நேயமிக்க செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் இருக்கிறது.
English Summary
two police who turned into stairs to restore pregnant woman