தோட்டத்துக்கு வாங்க கடனை திரும்ப தருகிறேன் என கூறியதை நம்பி சென்ற தந்தை, மகன்! அங்கு நடந்த கொடூரம்!
two people killed in pudukottai
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீராச்சாமி. தொழில் அதிபரான இவர், அப்பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம், சமையல் கியாஸ் ஏஜென்சி நடத்தி வந்தார். இவரது மகன் முத்து என்பவர் அப்பகுதியில் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் விவசாய பணியை கவனித்து வந்தார்.
இவரது உறவினரான மூர்த்தி என்பவருக்கு விராச்சாமி பல லட்சம் ரூபாய் கடனாக கொடுத்து பல கட்டங்களில் உதவியுள்ளார். ஆனால் அந்த தொகையை திருப்பி கேட்கும்போதெல்லாம், இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வீராச்சாமி, பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் தோட்டத்துக்கு வாருங்கள் கடனை திருப்பிச் செலுத்துகிறேன் என வீராச்சாமியை அழைத்துள்ளார் மூர்த்தி. இதை நம்பிய அவர் தமது மகன் முத்து மற்றும் உறவினர்கள் இருவர் என நான்கு பெரும் மூர்த்தியின் தோட்டத்திற்கு சென்றுள்ளனர்.
ஆனால் தோட்டத்தில் மூர்த்தி பணத்தை தராமல் மிரட்டும் வகையில் பேசியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வீராச்சாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் திடீரென்று மூர்த்தியின் ஆதரவாக கூலிப்படையினர் ஆயுதங்களுடன் புகுந்து வீராச்சாமி உள்ளிட்ட நால்வரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் வீராச்சாமி மற்றும் அவரது மகன் முத்து ஆகிய இருவரும் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வீராச்சாமியின் உறவினர்கள் இருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீராச்சாமி மற்றும் அவரது மகன் முத்து ஆகிய இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை-மகன் 2 பேரையும் வெட்டிக்கொலை செய்த மூர்த்தி தலைமையிலான அந்த 10 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
English Summary
two people killed in pudukottai