83 வயதில் தனது உயிரிழந்த மனைவிக்காக காதல் அபிஷேகம்! வியக்கவைக்கும் உண்மை காதல்! - Seithipunal
Seithipunal



புதுக்கோட்டை மாவட்டம் உசிலங்குளத்தை சேர்ந்த சுப்பையா என்பவர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரின் வயது 83. இவர் தனது உறவினர் முறையுடைய செண்பகவல்லியை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

சுப்பையா-செண்பகவல்லி  தம்பதியினருக்கு 8 பிள்ளைகள். இந்த நிலையில் 13ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக சுப்பையாவின் மனைவி செண்பகவல்லி இறந்தார்.

தனது காதல் மனைவி இறந்ததால் மிகவும் சோகத்துடனே வாழ்ந்துவந்தார். இதனையடுத்து அவரது  மனைவிக்கு சிலை வைத்து மரியாதை செய்ய நினைத்தார். இந்தநிலையில் தனது மனைவி செண்பகவல்லிக்கு 3½ அடியில் வெண்கல சிலை செய்து, அதை தனது வீட்டின் முன்பு வைத்து, தினமும் வழிபாடு நடத்தி வருகிறார்.

நேற்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்தநிலையில் தலர் தினத்தை முன்னிட்டு சுப்பையா, தனது காதல் மனைவி செண்பகவல்லியின் சிலையை சுத்தம் செய்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

               

13 ஆண்டுகளுக்கு முன் இறந்த காதல் மனைவியின் நினைவாக சிலை வைத்து அதற்கு மரியாதை செலுத்தி வரும் சுப்பையாவை அந்த பகுதியில் உள்ள மக்கள் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து சுப்பையா கூறுகையில், நங்கள் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டோம்,  திருமணத்திற்கு பிறகு என்னை மிகவும் பாசத்துடனும், எங்கள் இருவருக்குள் எந்த ஒரு சண்டை சச்சரவும் இன்றியும் வாழ்ந்துவந்தோம்.

எனது மனைவியின்  இழப்பை தாங்க முடியாமல் மிகுந்த துயரத்தில் இருந்தேன். மேலும் எனது மனைவி என்னுடன் கடைசி வரை இருப்பதற்காக  சிலை அமைக்க முடிவு செய்து, எனது வீட்டிலேயே சிலை அமைத்து தினமும் வழிபாடு நடத்தி வருகிறேன் என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

true love in old age


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->