கன்றுகுட்டியுடன் நாய் பாச போராட்டம்..! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த, கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னத்துரை. இவர் தனது வீட்டில் பசு ஒன்றை வளர்த்து வந்தார். அந்த பசு 6 மாதத்திற்கு முன் கன்றுக்குட்டி ஈன்றது.  

இந்நிலையில் 6 மாத கன்றுகுட்டி, மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்தது. பின் கன்றுக்குட்டியை காப்பாற்ற முடியாமல்  இறுதியில் இறந்து போனது.  

சின்னத்துரை அவர்கள் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இந்நிலையில் 6 மாத கன்று இறந்ததை பார்த்த அவரது நாய் இறந்த கன்று குட்டியின் உடலை சுற்றி சுற்றி வந்தது. 

கன்றுகுட்டி பிறந்தது முதல் அதனுடன் விளையாடி வந்த நாய், அதை புதைத்த போது அழுவது போன்று சத்தம் எழுப்பியது. கன்றுகுட்டி முழுவதுமாக புதைத்ததும் அதை தேடி நாய் அங்குமிங்கும் ஓடி அலைந்தது,  காண்போரை நெகிழச் செய்தது. 

கிணற்றில் தவறி விழுந்து இறந்த கன்றுகுட்டியை பிரிய மனமின்றி தவித்த நாயின் பாசப் போராட்டம் காண்போரை  கண்கலங்க செய்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Manabarai Kandrukutti With Dog


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->