திருநங்கைகளை ஏன் இப்படி செய்றீங்க?? பேசாமல் கருணை கொலை செய்திடுங்கள்!! குமுறும் திருநங்கைகள்!! - Seithipunal
Seithipunal



தற்போதைய வாழ்க்கைமுறையில் திருநங்கைகளும் வாழ்க்கையின் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் வகையில் காவல்துறை, மாவட்ட ஆட்சியர், மருத்துவம், பொறியியல் என அணைத்து துறைகளிலும் முன்னேறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். பலர் சில துறையிலும் பனி செய்தும் வருகின்றனர். மேலும் அரசியலிலும் களம் இறங்குகின்றனர்.

பொதுவாக திருநங்கைகள் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். அவர்களில் ஒரு சிலர் செய்யும் கீழ்த்தரமான செயலால் அனைவர்க்கும் அவப்பெயரை பெற்றுத்தருகிறது. இந்தநிலையில் தங்கள்மீது  மீது பொய் வழக்குகள் போடுவதாகவும், பொது இடங்களில் தங்களை அவதூறாகப் பேசுவதாகவும் கூறி, சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் திடீரென்று 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் போராட்டத்தில் குதித்தனர். 

அவர்கள் காவல்நிலையத்தில் ஒன்றுகூடி காவல்துறையினருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இரு தரப்பினருக்கும் இடையே நீண்டநேரமாக பேச்சுவார்த்தை  நடைபெற்ற பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.  மேலும் செய்தியாளர்களிடம் பேசிய போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகள் கூறுகையில், வரும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும், எங்களை அவதூறாக பேசுவதற்கு பதிலாக எங்களைக் கருணைக் கொலை செய்து விடலாம் என்றும் வருத்தத்துடன் கூறினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

transgender protest in salem police station


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->