விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் - முக்கிய இடங்களில் அலைமோதும் கூட்டம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், சனி, ஞாயிறு என்று மொத்தம் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள், தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு சென்றனர். இந்த நிலையில், மக்கள் 3 நாள் விடுமுறை முடிந்து நேற்று மாலை முதல் கார் மற்றும் பேருந்துகளில் மீ்ண்டும் சென்னைக்கு திரும்பி வந்தனர். 

மக்களின் வசதிக்காக தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதனால், பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் நேற்று மாலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதையடுத்து, நேற்று இரவு சொந்த ஊர்களிலிருந்து புறப்பட்ட மக்கள், இன்று காலை சென்னைக்கு வந்தடைந்தனர். இதனால் கிளாம்பாக்கம், பெருங்களத்தூர் மற்றும் தாம்பரத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும், தாம்பரம் பேருந்து நிலையம் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

traffic in chennai prungalathur and tambaram


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->