தமிழகத்தில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்!
பெய்ட்டி புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடந்தது. இதை தொடந்து, அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்துள்ளது.
தற்போது தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை, வடதமிழக கடலோர பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
தொடர்ந்து 21-ந்தேதி தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம் என்றும், 22-ந்தேதி ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
tomorrow rain for tamil nadu