கடுப்பான இளைஞர்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய சம்பவம்! பெரும் பரபரப்பு!.
கடுப்பான போராட்டக்காரர்கள் இன்று பெரும் கோவத்திற்கு உள்ளாகி பெரும் போராட்டத்தை நடத்திவருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மெரினாவில் மீண்டும் இளைஞர்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 6 வார காலம் கெடு விதித்திருந்தது. ஆனால் மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மத்திய அரசின் அலட்சியத்தால் கடுப்பான இளைஞர்கள் சுங்கச்சாவடிகளில் மட்டும் அதிக பணம் வசூல் செய்வதாக கடுப்பான தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ரகளையில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு இந்த விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வந்ததால் கடுப்பான போராட்டக்காரர்கள் இன்று பெரும் கோவத்திற்கு உள்ளாகி பெரும் போராட்டத்தை நடத்திவருகின்றனர்.
இந்தநிலையில் விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அங்குள்ள சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி பெரும் ரகளையில் ஈடுபட்டனர். சுங்கச்சாவடி முழுவதும் சுக்குநூறாக நொறுங்கியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.