அமைச்சர் ஓ.எஸ் மணியனை தலைதெறிக்க ஓடவிட்ட 33 பேர்.! நள்ளிரவில் போலீசார் நடத்திய வேட்டை.!! - Seithipunal
Seithipunal


தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கார் மீது தாக்குதல் நடத்தியதாக நள்ளிரவில் வீடு புகுந்து போலீசார் 33 பேரை கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் 16 ஆம் தேதி தமிழகத்தை கஜா புயல் சூறையாடியது. அப்போது நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் நிலைகுலைந்து போக்கினை. சோறு, தண்ணி ஏதும் இல்லாமல் மக்கள் கடும் கொந்தளிப்பில் இருந்தனர். 

மேலும் சாலை மறியல், போராட்டம் என கடும் கோவத்தில் இருந்த மக்களுக்கு அரசு அதிகாரிகளை பார்த்தாலே ஓட ஓட விரட்டியடித்தனர். கடந்த மாதம் 18-ம் தேதி புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட சென்ற தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்களை கடும் கோவத்தில் இருந்த மக்கள் முற்றுகையிட்டனர். 

மேலும் அவரின் காரை சிலர் தாக்க முயற்சித்த காட்சிகளும், காரில் அமைச்சர் தப்பிச் செல்லும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த காணொளியில் உள்ளவர்களை அடையனம் கண்டுகொண்ட நாகை மாவட்ட போலீசார், அதனை அடிப்படையில் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, தலைஞாயிறு பகுதியில் வீடு வீடாக புகுந்து 33 பேரை கைது செய்துள்ளனர். 

தலைஞாயிறு பகுதியில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 33 பேர் கைது செய்யப்பட்டிருப்பது அந்த மாவட்ட மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN MINISTER ATTACK 33 PEOPLE ARREST


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->