தமிழகத்தில் மார்ச் 8 ஆம் தேதி விடுமுறையா? - தமிழக அரசின் முடிவு என்ன?
tn govt discussholiday announce march 8
ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்தசி திதி சிவராத்திரி என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்த வகையில், மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி திதியைதான் நாம் மகாசிவராத்திரியாக எடுத்துகொள்கிறோம்.
அந்த வகையில் இந்த வருடம் தேய்பிறை சதுர்த்தசி திதி அதாவது சிவராத்திரி மார்ச் 8ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் தான் ஆரம்பிக்கிறது. இந்த நிலையில், மார்ச் 8ஆம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் சிவராத்திரி அன்று சிவன் கோயில்களில் மட்டுமின்றி குலதெய்வ கோயில்களிலும் பெரும்பாலான மக்கள் வழிபாடு செய்வார்கள். இதற்கிடையே, விரைவில் தேர்தல் வரவுள்ளதால், சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில், மார்ச் 8ஆம் தேதி விடுமுறை அளிக்க திமுக அரசு ஆலோசனை செய்து வருகிறது. ஆனால், இது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்படுகிறது.
English Summary
tn govt discussholiday announce march 8