தற்காலிக ஓட்டுநருக்கு அழைப்பு.. போராட்டம் தீவிரமடையுமோ? அச்சத்தில் பொதுமக்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பொங்கல் சிறப்பு பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் உரிய பயிற்சி பெற்று, உரிமம் பெற்ற ஓட்டுநர்கள், நடத்துனர்கள் தங்களின் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதார் அட்டையுடன் மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து துறை தொழிற்சங்கத்தினரின் போராட்டம் இன்று 2வது நாளை எட்டியுள்ள நிலையில் பொங்கலுக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுனர்கள், நடத்தினார்கள் அழைக்கப்பட்டு இருப்பது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே தமிழக முழுவதும் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகளில் பணியமர்த்தப்பட்டுள்ள தற்காலிக ஓட்டுனர்களால் சில பகுதிகளில் விபத்து ஏற்பட்டு வரும் சூழலில் பொங்கல் சிறப்பு பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுனர்களை அரசு அழைத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt call for temporary drivers conductors


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->