விபத்தில் சிக்கும் பள்ளி மாணவர்களுக்கு 1 லட்சம் நிவாரணம் - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு.!
tn govt 1 lakhs compensation announce school student accident
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ மாணவிகள் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தாலோ, பலத்த காயமடைந்தாலோ அல்லது சிறிய காயம் போன்றவற்றினால் பாதிப்படைந்தாலோ அவர்களுக்கு ரூ.1,00,000 வரை நிவாரணத் தொகை வழங்க தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அதிகாரம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ”அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு எதிர்பாராத விபத்து காரணமாக, உயிரிழப்பு நிகழ்ந்தால் 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
அதே போல பலத்த காயம் ஏற்பட்டால் ரூ.50 ஆயிரமும், சிறிய காயம் ஏற்பட்டால் ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகை வழங்கப்படும்” என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tn govt 1 lakhs compensation announce school student accident