#BREAKING விபத்தில் சிக்கினார் தமிழக ஆளுநர் பண்வாரிலால் புரோகித்.!!
#BREAKING விபத்தில் சிக்கினார் தமிழக ஆளுநர் பண்வாரிலால் புரோகித்.!!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூய்மை இந்தியா பணிகளைத் தொடங்கி வைக்கவும், மத்திய அரசின் பல்வேறு திட்டப்பணிகளையும் பார்வையிடுவதற்காகவும் புதுக்கோட்டைக்கு வருகை தந்தார்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா பணியை தொடங்கி வைத்த அவர், அங்கு சுகாதாரமின்றிக் காணப்பட்ட கழிவு நீர்க் கால்வாயை உடனடியாக சுத்தம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனிடையே, அரசு மகளிர் கலைக்கல்லூரி முன்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி தலைமையில் திரண்ட 2000த்திற்கும் மேற்பட்ட திமுகவினர், ஆளுநர் வருகைக்கு எதிராக கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த சுற்று பயணத்தை முடித்து விட்டு சென்னை நோக்கி வரும் போது அவரின் காரனது விபத்துக்குள்ளானதாகவும், அதில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது.