லஞ்சம் வாங்குவதற்கு ஆள் வைத்த சர்வேயர்..!! கையும் களவுமாக சிக்கிய சிறப்பான சம்பவம்..!!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுாரைச் சேர்ந்தவர், ஜெயச்சந்திரன் (வயது 47). இவருக்கு சொந்தமான இடம், திருவண்ணாமலை கொசமடத் தெருவில் உள்ளது. இந்த இடத்தை ஜெயச்சந்திரன் வேறொருவரிடமிருந்து சமீபத்தில் வாங்கி இருக்கிறார்.

இந்த இடத்தின் பட்டா பெயர் மாறுதலுக்காக, திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் செயல் பட்டுக் கொண்டிருக்கும், நகர நில வரித் திட்ட சிறப்பு தாசில்தார் அலுவலகத்தில், விண்ணப்பித்தார்.

உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்ட்டும், இவருக்கு பட்டா மாறுதல் வழங்காமல், அதிகாரிகள் இழுத்தடித்துள்ளனர். இறுதியாக, சர்வேயர் கருணாகரன் (வயது 42) 25 ஆயிரம் பணம் கொடுத்தால் பட்டா மாற்றித் தருவதாகவும், அந்தப் பணத்தைப் பலருக்கும் பங்கு போட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

இதற்கு டெய்லர் மூர்த்தி (வயது 68) என்பவர் புரோக்கராக இருக்கிறார், அவரிடம் தான் அந்தப் பணத்தைக் கொடுக்க வேண்டும், என்றும் சர்வேயர் கூறி உள்ளார். 

இது குறித்து, ஜெயசந்திரன், திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த ஆலோசனையின் படி, ரசாயனம் தடவிய இருபதாயிரம் ரூபாய் பணத்தை, புரோக்கர் மூர்த்தியிடன் ஜெயச்சந்திரன் ஒப்படைத்தார்.

அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு, புரோக்கர் மூர்த்தி, சர்வேயர் கருணாகரனிடம் கொடுக்கும் போது, மறைந்திருந்து கண் காணித்த, லஞ்ச ஒழிப்பு போலீசார், சர்வேயரைக் கையும் லஞ்சமுமாகப் பிடித்தனர்.

அவருடன் இருந்த, புரோக்கர் மூர்த்தியையும், கைது செய்தனர். இப்படி லஞ்சம் வாங்கிக் கொழுத்திருக்கும், அரசு அதிகாரிகளுக்கு, லட்சக் கணக்கில், அரசு சம்பளம் வழங்குகிறது, என்பது தான் வேதனையான செய்தி!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN GOVERNMENT STAFF ARREST


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->