திருப்பத்தூரில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: தேதி குறித்த எடப்பாடி பழனிசாமி!  - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, 'திருப்பத்தூர், வாணியம்பாடி தொகுதி சின்னாங்கபட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். 

மேலும் மாணவ-மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். 

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் இருந்த தேக்கு மரங்களை சட்டவிரோதமாக வெட்டி சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தி.மு.க அரசை வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்ட சார்பில் 16ஆம் தேதி காலை 10 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட கழகச் செயலாளர், ஒன்றிய செயலாளர், ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupathur ADMK Demonstration Edappadi Palanisamy  


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->