போலீஸ் ஸ்டேசனில், டிக்- டாக் ஆட்டம் காட்டிய வாலிபர்கள் – விபரீதம் ஆனது விளையாட்டு…! - Seithipunal
Seithipunal


 

தற்போதைய சமூக வலைத் தலங்களில் பிரபலமான ஆப், டிக்-டாக். பிரபலமான படங்களில் வந்துள்ள வசனம், காமெடிக்கு ஏற்ப, இளைஞர்கள் நடித்து, அதனை அப்லோட் செய்வது, இன்றைய இளைஞர்களின் முக்கிய பொழுது போக்காக உள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி துலுக்கப்பட்டி, கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன், தங்கேஸ்வரன், முருகேசன், குருமதன் ஆகியோர், ஊர்வலமாக வாகனத்தில் செல்வதற்காக, முன் அனுமதி பெறுவதற்காக, காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

அப்போது, பெரும்பாலான போலீசார், ரேசன் கடைகளுக்கு, பந்தோபஸ்துக்குச் சென்று விட்டனர். அங்கு காத்திருந்த இளைஞர்கள், சிறுத்தை படத்தில் உள்ள வசனமான, “இந்த வீட்டுக்கெல்லாம் இடது காலை வச்சுத் தான் உள்ளே போகனும்” என்ற வசனத்தை, போலீஸ் ஸ்டேசன் வாசற்படியில் நின்று,  நடித்துக் காட்டி, அதை டிக்-டாக் ஆப்பில் அப்லோட் செய்துள்ளனர்.

இந்த வீடியோ, வைரலாகப் பரவியது. இதனை சம்பந்தப்பட்ட சிவகாசி, கிழக்கு போலீசாரும் வீடியோவில் பார்த்தனர்.

பின், இந்த வீடியோவை உருவாக்கிய அந்த நான்கு இளைஞர்களும் கைது செய்யப் பட்டனர். அவர்கள் மீது, வழக்கும் பதிவு செய்யப் பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tick-talk game going to be serious


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->