பீர் பாட்டிலால் 3 பேரை குத்தியவர்கள் கைது.! பைக் மோதியதால் நடந்த விபரீதம்.!!
பீர் பாட்டிலால் 3 பேரை குத்தியவர்கள் கைது.! பைக் மோதியதால் நடந்த விபரீதம்.!!
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அருகே ஆர்.எப். ரோடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் மகன் சுரேஷ். இவர், நேற்று மாலை பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் ஒரு டீக்கடை முன்பு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவர்மீது எதிர்பாராத விதமாக சுரேஷின் பைக்கானது டீக்கடையில் பேசிக்கொண்டிருந்த கண்ணன் மீது மோதி விட்டது.
இதனைத் தொடர்ந்து, ஆத்திரம் அடைந்த கண்ணன் சுரேஷிடம் கடுமையாக சண்டையிட்ட நிலையில், பின்பு இருவரும் பயங்கரமாக மோதி கொண்டனர். அப்போது, கண்ணன் உடன் இருந்தவர்கள், அருகில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து, உடைத்து பைக்கை மோதிய சுரேஷ் மற்றும் அவரது உறவினர்கள் பிரதாப், கலைவாணன் ஆகிய மூன்று போரையும், மார்பு, வயிறு என அனைத்து பகுதிகளிலும் சரமாரியாக குத்தினர்.
அப்போது அருகில் இருந்த பொதுமக்கள், படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு, ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பீர் பாட்டிலால் தாக்கிய கண்ணன் மற்றும் அவரது மைத்துனர் விஜய், நண்பர் வீரமணி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Three people have been arrested by attempt murder