தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கை சிபிஐ-க்கு ஏன் மாற்றவில்லை..! உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சரமாரி கேள்வி..!!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த வழக்கை சிபிஐ-க்கு ஏன் மாற்ற கூடாது ? என சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த வழக்கை சிபிஐ-க்கு ஏன் மாற்ற கூடாது ? என சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான, தூத்துக்குடி மக்களின் 100 வது நாள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதியாக பேரணியாக சென்ற போது, அம்மக்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். மேலும் அந்த பேரணி கலவரமாக மாறவே போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்தார். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது.
இதையடுத்து, துப்பாக்கிசூடு விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் துப்பாக்கி சூடு குறித்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கை ஏன் சிபியிடம் மாற்ற கூடாது என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.
மேலும் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த வழக்கு பற்றி இன்று தெரிவித்ததாவது :-
போராட்டத்தை கலைக்க வானத்தை நோக்கி தான் சுட்டு இருக்க வேண்டும்.
பிரேத பரிசோதனை அறிக்கையை உறவினரிடம் ஒப்படைக்க வேண்டும்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கை ஏன் சிபியிடம் மாற்ற கூடாது.
போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டன. வன்முறை வீடியோக்கள் உள்ளன.
அரசியல்வாதிகள் என்றாலும், காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் தண்டிக்கப்படுபவர்களே.
பொதுவான விசாரணைக்கு ஏன் தமிழக அரசு உத்தரவிடவில்லை என சரமாரியாக கேள்வி எழுப்பினர் தலைமை நீதிபதி.
English Summary
Thoothukudi Sterlite Case Today Investigation High Court