தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த வழக்கை ஏன் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக்கூடாது?.! சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி..!!
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை ஏன் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக்கூடாது? -சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
கடந்த மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான, தூத்துக்குடி மக்களின் 100 வது நாள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதியாக பேரணியாக சென்ற போது, அம்மக்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். மேலும் அந்த பேரணி கலவரமாக மாறவே போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்தார். மேலும் உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து, துப்பாக்கிசூடு விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த வழக்கை ஏன் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக்கூடாது? என்று கேள்வி எழுப்பினர். மேலும் துப்பாக்கி சூடு தொடர்பாக காவல்துறை வசம் இருக்கும் வீடியோ மற்றும் ஆவணங்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதுகுறித்து விரிவான பதில் அளிக்க தமிழக அரசு கால அவகாசம் கேட்டதால் விசாரணை தள்ளி வைத்தது.
English Summary
Thoothukudi GUN Fire Shoot case change CBI