மூக்குப்பொடி சித்தர் என்னும் மொட்டையக்கவுண்டர் இன்று காலமானார்!! அதிர்ச்சியில் டிடிவி தினகரன்!! - Seithipunal
Seithipunal


சித்தர்கள் நிறைந்த ஊர் திருவண்ணாமலை ஆகும். அதிலும் குறிப்பிடத்தக்க சித்தர்களில் ஒருவர் மூக்குப் பொடி சித்தர் ஆவார். இந்நிலையில் மூக்குப் பொடி சித்தர் இன்று அதிகாலை 5 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 90-க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ராஜபாளையம் தான் மூக்குப்பொடி சித்தரின் சொந்த ஊர். அதேபோல இவருடைய இயற்பெயர் மொட்டையக்கவுண்டர். மூக்குப்பொடியை அதிகம் பயன்படுத்துவதால் பக்தர்களால் மூக்குப் பொடி சித்தர் என அழைக்கப்பட்டார். இவர் திருவண்ணாமலை  கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்ரி ஆசிரமத்தில் தங்கியிருந்தார். 

   

மூக்குப் பொடி சித்தருக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலர் பக்தர்களாக இருந்தனர். குறிப்பாக அமமுக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி ஆகியோர் மூக்குப் பொடி சித்தரின் தீவிர பக்தர்கள் ஆவார். அவ்வப்போது டிடிவி தினகரன், ரங்கசாமி ஆகியோர் மூக்குப் பொடி சித்தரை சந்தித்து வருவார்கள்.

இந்நிலையில், மூக்குப் பொடி சித்தருக்கு ஏற்பட்ட உடல்நிலை குறைவால் அவரது உயிர் இன்று அதிகாலை பிரிந்தது. அவர் தான் தங்கியிருந்த சேஷாத்ரி கிரிவலப் பாதையிலேயே இன்று அதிகாலை 5 மணிக்கு உயிர் பிரிந்தது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvannamalai Mookkupodi Siththar Death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->