தமிழகத்தில் 8000 பிஞ்சுகளை மண்ணை தொடும் முன்னே கொலை செய்த கணவன்., மனைவி.! சிக்கியது எப்படி.? நெஞ்சை பதறவைக்கும் முழுதகவல்.!!
தமிழகத்தில் 8000 பிஞ்சுகளை மண்ணை தொடும் முன்னே கொலை செய்த கணவன்., மனைவி.! சிக்கியது எப்படி.? நெஞ்சை பதறவைக்கும் முழுதகவல்.!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேங்கிக்கால் பகுதியை சார்ந்தவர் மருத்துவர்.ஆனந்தி., இவர் தனது இல்லத்திலேயே ஸ்கேன் நிலையம் வைத்து நடத்தி., அதன் மூலம் கருவில் இருக்கும் குழந்தையானது ஆண் குழந்தையா? அல்லது பெண் குழந்தையா? என்று பரிசோதித்து., அந்த குழந்தை பெண்ணாக இருக்கும் பட்சத்தில் கருக்கொலை செய்து வந்துள்ளார். இந்த தகவலானது சென்னை சுகாதார பணிகளின் இயக்குனருக்கு கிடைத்துள்ளது.
இந்த தகவலை ஆதாரமாக கொண்ட இயக்குனரின் கீழ் அமைக்கப்பட்ட குழுவினர்., சென்ற வாரம் முதலாகவே சம்மந்தப்பட்ட இடத்தில் இரகசிய முகாமிட்டு சோதனை செய்து வந்தனர். அந்த சோதனையில்., ஆனந்தி சட்டவிரோதமாக கருக்கலைப்பு என்னும் கருக்கொலை செய்து வருவது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் இரவு நேரத்தில் மட்டும் இது போன்ற கருக்கொலை சம்பவங்கள் நடைபெற்றது உறுதிப்படுத்தப்பட்டதால்., ஆனந்தியை கையும் களவுமாக பிடிப்பதற்காக திட்டம் தீட்டினர்.
இதனையடுத்து., அந்த அதிகாரிகள் கர்ப்பிணி பெண்ணொருவரை தயார் செய்து., அந்த பெண்ணிடம் ரூ.6 ஆயிரம் வழங்கி மருத்துவர்.ஆனந்தியின் இல்லத்திற்கு சென்று கருக்கலைப்பு குறித்து பேசி பின்னர் சம்மதம் கூறும் வரை காத்திருந்து அலைபேசியில் தகவல் வழங்க தேவையான திட்டம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கூறி அனுப்பி வைத்தனர்.
இவர்களின் திட்டப்படி சந்தேகம் வராத அளவிற்கு நடந்து கொண்ட அந்த பெண் கருக்கலைப்பிற்கு நேற்று நள்ளிரவில் தயாராகவே., அதற்கு தேவையான ஏற்பாடுகளை மருத்துவர்.ஆனந்தி செய்துகொண்டிருந்தார். பின்னர் இந்த தகவலை அந்த பெண் அதிகாரிகளுக்கு வழங்கவே., அவர்களின் இல்லத்தில் விரைந்த மாநில ஆய்வுக்குழு கண்காணிப்பாளர் திரு.தாமஸ் பிரபாகரன்., நுண்கதிர் மருத்துவர்.நடராஜன்., திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ பணிகளின் துணை இயக்குனர் திரு.பாண்டியன் ஆகியோர் ஆனந்தியின் இல்லத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் அங்கு வைத்திருந்த ஸ்கேன் கருவிகள்., மருத்தவ உபகரணங்கள் அதிரடியாக கைப்பற்றப்பட்டது. மேலும் அந்த இல்லத்தில் இருந்த பாதாள அறையை கண்டறிந்த அதிகாரிகள் சோதனைக்கு தயாரான ஆனந்தியை கையும் களவுமாக கைது செய்தனர். அங்குள்ள அறிக்கைகளை சோதனை செய்த அதிகாரிகள் அதில் இருந்த தகவல்களை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அங்கிருந்த தகவல்கள் அனைத்தும் கருவில் உள்ள குழந்தைகள் பெண் குழந்தைகள் என்று உறுதி செய்யப்பட்டு., அவர்களுக்கு கருக்கலைப்பு என்ற கருக்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் சில தகவலைகளை உறுதிப்படுத்தும் வகையில் தேவையான ஆதாரங்கள் வலுவாக அதிகாரிகளிடம் சிக்கியது. இதனையடுத்து., ஆனந்தியை கைது செய்த திருவண்ணாமலை காவல் துறையினர்., ஆனந்திக்கு உறுதுணையாக இருந்த அவரது கணவர் தமிழ்செல்வன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சிவகுமார் என்பவர்களையும் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த திருவண்ணாமலை காவல் துறையினர்., அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் நேற்று முதல் மேற்கொண்ட விசாரணையில் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் சிவகுமார்., ஸ்கேன் நிலையத்திற்கு வரும் பெண்களை பேருந்து நிலையத்தில் இருந்து அழைத்து வந்து பின்னர் கருக்கொலை நிறைவு பெற்றவுடன் மீண்டும் அவர்களை பேருந்து நிலையத்திலேயே கொண்டு சென்று இறங்கிவிடும் ஓட்டுநராகவும்., இது போன்று கருக்கொலை செய்ய விரும்புபவர்களை கண்டறிந்து வரும் ப்ரோக்கராகவும் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
மேலும்., அவ்வாறு கருக்கொலை செய்யவரும் பெண்களிடம் ரூ.50 ஆயிரம் வரை பணம் கேட்டதும்., முறையற்று கர்ப்பம் தரித்த பெண்களின் கருவை கருவை கலைத்து அவர்களிடமும் அதிகளவில் பணம் வசூல் செய்தது தெரியவந்தது. அந்த வகையில்., சென்ற 2016 ம் வருடத்தின் தொடக்கத்தில் இருந்து இவர்கள் கருக்கலைப்பு என்னும் கருக்கொலைகளை செய்தது தெரியவந்தது.
மேலும் தற்போது வரை சுமார் 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இது போன்ற கருக்கலைப்பு என்ற கருக்கொலைகள் செய்யப்பட்டது கண்டறியப்பட்ட நிலையில்., தற்போது வெளியான விசாரணையில், ஆனந்தி மற்றும் அவரின் கணவர் தமிழ்ச்செல்வன் மற்றும் உதவியாளர் சிவகுமார், கடந்த பத்து ஆண்டுகளில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட கருகலைப்பு செய்துள்ளது உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் மீது, பாலின தேர்வு தடை சட்டம் 1994 உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்த வரையில் இது போன்ற ஸ்கேன் மையங்கள் என்ற பெயரில் பல கருக்கொலை மையங்கள் செயல்பட்டு வருதாக வந்த தகவலை அடுத்து, அதிகாரிகள் 3 ஸ்கேன் மையத்திற்கு மூடுவிழா நடத்தி உள்ளனர்.
அந்த வகையில்., இது போன்ற மையங்கள் திருவண்ணாமலை பகுதியில் அதிகளவில் செயல்பட்டு வருவதாகவும்., அதனை உடனடியாக கண்டறிந்து தகுந்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வற்புறுத்தியுள்ளார்.
English Summary
THIRUVANAMALAI ILLEGAL ABORTION DOCTOR., HOW POLICE ARREST.