"வேறு மதத்தவரை கொலை செய்திருந்தால் சும்மா இருப்பீர்களா?" கிழித்து தொங்கவிடும் கிராம மக்கள்!!
thirupuvanam peoples attacking media
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திருபுவனத்தில் ராமலிங்கம் என்பவரை சில சமூக விரோதிகள் கொலை செய்துள்ளனர்.
முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்கள் அவர் வேலைக்கு ஆள் எடுக்க இடத்தில் மதமாற்றத்தில் ஈடுபட்டதை பார்த்த ராமலிங்கம்," எதற்காக மதம் மாற்றம் செய்ய முயற்சி செய்கிறீர்கள்? நீங்கள் அப்படியே இருங்கள். நாங்கள் இப்படியே இருக்கிறோம்.
நம்ம இந்தியாவில் எல்லாருமே ஒன்னு தான். உங்க தொப்பியை குடுங்க நா போட்டுக்கிறேன்" என வாங்கி அவர்களது தொப்பியை அணிந்து கொண்டவர் "உங்க மதத்தை நா ஏத்துக்கிறேன் அதே போல நீங்களும் எங்க மதத்தை ஏத்துக்கோங்க" என கூறி திருநீறை அவருக்கு அணிவித்தார்.
"இங்க நாம் எல்லோரும் ஒன்னு தான். எதுக்கு இப்பிடி பண்றீங்க? பிரிவினையை ஏற்படுத்துறீங்க?" என கேட்டுவிட்டு பின்னர் சென்றுள்ளார். இதனால், அவரை சம்பவம் நடந்த பின்னர் இரவு அவரை வெட்டி கொன்றுள்ளனர்.
இதுகுறித்து, பல்வேறு கட்சியினரும் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், நேற்று இணையத்தில் அவருக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் தங்களது கருத்தினை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், #JUSTICEFORRAMALINGAM என்ற ஹாஸ்டக் பயன்படுத்தி டிவிட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. இதுகுறித்து ஊடகங்களோ முன்னணி பத்திரிகை நிறுவனங்களோ எந்த விவாத நிகழ்வுகளையும் முன்னெடுக்கவில்லை.
ஆனால் இன்று அனைவரும் அதை பிரபலமாக பேசவும் ஒப்பிற்காகவும், தனது விளம்பரத்திற்காகவும் கேமராவும் கையுமாக திருபுவனம் வந்த ஊடகக்காரர்களை மக்கள் விரட்டி அடிக்கின்றனர்.
இதே போல் ஒரு கிறித்தவரையோ அல்லது இஸ்லாமியரையோ பிற மதத்தவர் கொலை செய்திருந்தால் இப்படி கண்டுகொள்ளாமல் விட்டிருப்பார்களா? அரசியல்வாதிகளும் இப்படி தான் இருக்கின்றனர் என மிகவும் ஆதங்கத்துடன் அம்மக்கள் பேசுகின்றனர்.
English Summary
thirupuvanam peoples attacking media