கிளப்..! பார்..! விபச்சாரம்..! என்ன வேணா பண்ணிக்கலாம்..! மாதம் 2 இலட்சம் லஞ்சம் கொடுங்க..!! திருப்பூரில் அரங்கேறும் அட்டூழியங்கள்..!!!
கிளப்..! பார்..! விபச்சாரம்..! என்ன வேணா பண்ணிக்கலாம்..! மாதம் 2 இலட்சம் லஞ்சம் கொடுங்க..!! திருப்பூரில் அரங்கேறும் அட்டூழியங்கள்..!!!
தமிழிலே ஒரு பழமொழி உண்டு! கிடப்பதெல்லாம் கிடக்கட்டும். கிழவியைத் துாக்கி மனையில் வை! என்று‘
அது போலத் தான் நடந்து கொண்டிருக்கிறது, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் காவல் நிலையம். இங்கு போர்டு வைக்காத குறையாக, லஞ்சப் பணத்தை தண்ணீராகக் கறந்து கொண்டிருக்கிறார்கள்.
சீட்டாட்ட கிளப் நடத்த, மாதம் தோறும் ஒரு தொகை கொடுத்து விட வேண்டும். இந்த தாராபுரத்தில், உள்ளவர்கள் பெரும்பாலானோர், மிக வசதியானவர்கள். ஃபைனான்ஸ் தொழில் செய்பவர்கள். அதனால், இங்கு உள்ள சீட்டாட்ட கிளப்பில், லட்சக் கணக்கில் பணம் வைத்து விளையாடுகிறார்கள்.
போலீசுக்கு, மாதம் இவ்வளவு, என்று லம்ப்பாக ஒரு பெரும் தொகையைக் கொடுத்து விடுகிறார்கள். அதனால், போலீஸ் இந்தப் பக்கம் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை. மணல் திருட்டில், வருவாய்த் துறை அதிகாரிகளுடன், ஒப்பந்தம் போடாத குறையாக, பங்கு பிரித்துக் கொள்கிறார்கள்.
இது போல, சட்ட விரோதமான, விபசாரம், ஒயின் ஷாப் பார் என எதிலெல்லாம் வருமானம் கிடைக்குமோ, அனைத்திற்கும், அனுமதி உண்டு. இங்குள்ள காவல் உயர் அதிகாரி, மாதம் குறைந்தது, 2 லட்சத்திற்கு குறையாமல், லஞ்சம் வாங்குகிறார் என்றும், தனக்கு கீழே உள்ள, காவலர்களுக்கும், பங்கு கொடுப்பதால், யாரும், இவரைப் பற்றி புகார் கொடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
பணம் பாதாளம் வரை பாய்கிறது!
English Summary
THIRUPPUR CITY LOT OF CRIME IN POLICE SUPPORT