எடப்பாடியை பாராட்டிய திருமா!! 'அதிமுகவிற்கு வலைவிரிக்கிறார்' என கலாய்த்த நெட்டிசன்களால் எரிச்சலடைந்த விசிகவினர்!!
எடப்பாடியை பாராட்டிய திருமா!! 'அதிமுகவிற்கு வலைவிரிக்கிறார்' என கலாய்த்த நெட்டிசன்களால் எரிச்சலடைந்த விசிகவினர்!!
கடந்த சில நாட்களாவே விசிக தலைவர் திருமாவளவனுக்கு, திமுகவுடன் கூட்டணி குறித்த பிரச்சனை ஏற்பட்டது. திமுக பொருளாளர் துரைமுருகன் மதிமுக மற்றும் விசிக திமுக கூட்டணியில் இல்லை என அறிவித்தும் விட்டார். பின், ஸ்டாலினிடம் இருக்கட்சியை சேந்தவர் தலைவர்களும் முறையிட்டனர்.
பின்னர், அமைதி காத்த நிலையில் வைகோ மற்றும் திருமாவுக்கு வன்னியரசுவின் மூலமாக புதிய சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமா அவர்கள், "தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குறைத்து மதிப்பிட முடியாது, அவர் ஆட்சியையும் கட்சியையும் திறம்பட நடத்துகிறார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சி கவிழ்ந்துவிடும் என பலரும் கூறிய நிலையில், ஆட்சியை தக்க வைத்து சிறப்பாக நடத்துகிறார்" என்று புதிதாக அதிமுகவையும், முதல்வர் எடப்பாடியையும் பாராட்டியவாறு பேசியுள்ளார்.
இதுகுறித்து, விமர்சகர்கள் பல்வேறு விதமாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.