திருக்கோவிலூர் பலாத்கார கொலை குற்றவாளி மீது! மேலும் 3 பெண்கள் புகார்! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆராயி(வயது 45). இவருடைய மகள் தனம்(14). மகன் சமயன்(9).  அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் சமயன் 4-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி ஆராயி தனது மகன் சமயன், மகள் தனம் ஆகியோருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம மனிதர் சமயனை அடித்து கொலை செய்து, ஆராயி, தனத்தை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

Image result for vilippuram aarayi

இந்த சம்பவம் குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடலூர் மாவட்டம் புனகிரியை சேர்ந்த தில்லைநாதன் (37) என்பவரை கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அவனது கள்ளக்காதலி அம்பிகாவையும் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் தில்லைநாதனை போலீஸ் காவலில் எடுத்து திருப்பாலபந்தல் போலீஸ் நிலையத்தில் வைத்து தில்லைநாதனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Image result for vilippuram aarayi

விசாரணையில் அவர் வெள்ளம்புத்தூர் சம்பவம் மட்டுமின்றி, மேலும் ஒரு தாலி செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதையும் தில்லைநாதன் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து இன்று  தனிப்படை போலீசார் தில்லை நாதனை வெள்ளம்புத்தூர் கிராமத்துக்கு அழைத்து சென்று  ஆராயி வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தியது எப்படி என்று தில்லை நாதன் நடித்து காட்ட சொல்லி தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருக்கோவிலூர் மாணவன் கொலை: கைதான தில்லைநாதன் மீது மேலும் 3 பெண்கள் புகார்

இதற்கிடையே கைதான தில்லை நாதன் மீது வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த 4 பெண்கள் அரகண்ட நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து இருந்தனர். தில்லை நாதன் வீடு புகுந்து தங்களிடம் இருந்த நகைகளை பறித்து சென்றுவிட்டான் என புகார் தெரிவித்து இருந்தனர்.

Image result for vilippuram aarayi

இந்த நிலையில் திடீர் திருப்பமாக இன்று காலை வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த மேலும் 3 பெண்கள் அரகண்ட நல்லூர் போலீசில் புகார் செய்துள்ளனர்.  அதில் 2 பெண்கள் தில்லை நாதன் வீடு புகுந்து நகை பறித்து சென்றதாகவும், இந்த தொடர் புகார்களினால் கொலையாளி மீது போலீசார் இன்னும் தீவிரமா விசாரணை செய்து வருகின்றனர்.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirukovilur rape murder on the offender! 3 more women Report!


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->