தென்னிந்திய திருச்சபைகளில் நடக்கும் தில்லு முல்லுகள்! அதற்கு ஆதரவு தரும் அதிமுக எம்.பி!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள திருச்சபைகளில், மிகவும் பழமை வாய்ந்தது, தென் இந்திய திருச்சபை தான். 
    
மதுரை, திருநெல்வேலி, துாத்துக்குடி, சென்னை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களின் அனைத்து  சபைகளும், இவற்றுள் அடக்கம். இது தவிர, இலங்கையில் உள்ள திருமண்டலங்களும், இந்த திருச்சபையின் கீழ் தான் செயல்பட்டு வருகின்றன.
    
திருநெல்வேலி திருமண்டலத்தில், இந்த திருச்சபை நிர்வாகத்தின் கீழ், பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.
    
இவை எல்லாம், டி.டி.டி.ஏ., என்ற டிரஸ்ட் அமைப்பினால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை நிர்வாகம் செய்யும் நிர்வாகிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.
    
இதன்படி, கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மோசடிகள் நடந்துள்ளதாக, வேதநாயகம் என்பவர், வழக்கு தொடர்ந்தார். இதனால், நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கி, மறு தேர்தல் நடைபெற்றது.
    
இந்த தேர்தலில் வேதநாயகம் அணியினரே வெற்றி பெற்றனர். அது வரை, அமைதியாக இருந்த வேதநாயகம், அதன் பின்னர் தன் வேலையைக் காட்டத் துவங்கினார்.
    
இவர் தலைமையிலான திருச்சபை குருமார்கள், காணிக்கை பணத்தைச் சுருட்டி வருகின்றனர். தங்களது நடவடிக்கைகளை எதிர்க்கும் திருச்சபை பணியாளர்களை, பணியிட மாற்றம் செய்து வருகிறார்.
    
இவருக்கு ஆதரவாக, அதிமுக ராஜ்யசபை எம்.பி. விஜிலா சத்யானந்த் ஆதரவாக இருப்பதால், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளை கைகளில் போட்டுக் கொண்டு, இந்த தில்லு முல்லு வேலைகள் எல்லாம் நடைபெறுகின்றன, என்று அப்பகுதி மக்கள் கண்ணீர் சிந்துகின்றனர்.
    
கர்த்தர் கண் திறந்து, இந்த கொடுமைகளுக்கு, ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என்றும் அவர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thillai mudugu in south indian churches


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->