மனைவியை குடும்பம் நடத்த அழைத்த கணவன்!. மனைவி சொன்ன ஒரு வார்த்தை!. கணவன் தூக்கிட்டு தற்கொலை!.
கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. தற்கொலை செய்து கொண்டார் கணவர்.
தர்மபுரி மாவட்டம் வேடியப்பன் திட்டு பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் என்பவரின் மகன் கார்த்திக் 27 வயது நிரம்பிய இவர் கூலி வேலை பார்த்துவந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 1½ வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.
கார்த்திக்குக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கார்த்திக்கிடம் கோபித்துக் கொண்டு இவரது மனைவி அவரின் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவி கோபமடைந்து சென்றதால் கார்த்திக் வீட்டில் சாப்பாட்டிற்கு சிரமப்பட்டுள்ளார்.
இதனால் அவரின் மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அவரது வீட்டிற்கு அழைத்துள்ளார். அனால் அவரின் மனைவி வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கார்த்திக் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்துவந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
English Summary
There was a family dispute between husband and wife. The husband committed suicide.