மின் உற்பத்தி நிலையத்தில் திருட்டு.! திருடனை மடக்கி பிடித்த செயற்பொறியாளர்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில், பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்த சூழ்நிலையில், நெய்வேலி அருகே தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் காப்பர் கம்பி திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த கொல்லியிருப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான மின்உற்பத்தி நிலையம் உள்ளது. அங்கு நேற்று மாலை செயற்பொறியாளர் சிலம்பரசன் ரோந்து சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் அங்கு 300 மீட்டர் காப்பர் கம்பிகளை திருடி ஒரு பையில் வைத்துக் கொண்டு வெளியே ஓடிவந்தார். 

இந்நிலையில், அவரை மடக்கி பிடித்த செயற்பொறியாளர் தெர்மல் போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து, சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் விசாரணை நடத்தினார். விசாரணையில் காப்பர் கம்பியை திருடியவர் நயினார் குப்பத்தை சேர்ந்த சண்முகம், என்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

theif arrested by police from neyveli


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->