ஜெனரேட்டர்ட்  திருடர்கள் கைது!! தேவகோட்டை மக்கள் மகிழச்சி!! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் மைக்செட் தொழில் நடத்தி வருபவர்களிடமும், திருமண மண்டபங்களிலும் ஏராளமான ஜெனரேட்டர்கள் மற்றும் ஸ்பீக்கர்கள், விலையுயர்ந்த விளக்குகள் ஆகிய பொருட்கள் தொடர்ந்து திருடு போய்வருவதாக பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

 
இந்தநிலையில் ராம்நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இருந்த ஜெனரேட்டர், ஸ்பீக்கர்கள், விலையுயர்ந்த விளக்குகள் ஆகியவற்றையும் யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். 

இதுகுறித்து தேவகோட்டை நகர் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவாகி உள்ள காட்சிகளை பார்த்தனர். அதில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டது.

இதை தொடர்ந்து போலீசார் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள ஆத்திரான்பட்டி கிராமத்த்தில் மைக்செட் வைத்துள்ள சேவகன் என்ற செல்வம்(26) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த வீரன் (32) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கண்ணங்குடி, தேவகோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் நமுனை சமுத்திரம், நெற்குப்பை, கீழச்சிவல்பட்டி உள்பட பல பகுதிகளில் ஜெனரேட்டர் உள்ளிட்ட பல பொருட்களை திருடப்பட்டதாக தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து மாவட்டத்தை கலக்கி வந்த ஜெனரேட்டர்ட்  திருடர்கள் 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 8 ஜெனரேட்டர்கள், தலா 10 ஸ்பீக்கர், விலையுயர்ந்த விளக்குகளை கைப்பற்றினார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theft arrest in thevakottai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->