புத்திசாலித்தனத்தில் முட்டாள்தனமாக வேலை செய்த பலே திருடர்கள்!!
புத்திசாலித்தனத்தில் முட்டாள்தனமாக வேலை செய்த பலே திருடர்கள்!!
சென்னை, கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன், வயது 45. இவர் பணத்தை வட்டிக்கு பணம் விடும் , கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வருகிறார். இவர் அடிக்கடி தனது சைக்கிளில் அடிக்கடி திருவான்மியூரில் உள்ள வங்கிக்கு சென்று பணம் எடுத்து கொண்டு வருவார். இந்நிலையில் இதேபோல் நேற்று வங்கியில் பணம் எடுத்து கொண்டு தனது சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
பின்னர், திருவான்மியூர் அருகே, தனது சைக்கிளில், ஒரு பையில் ரூ. 50,000 பணம் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென, அவரது துணி சைக்கிளில் சிக்கிக்கொண்டது. சைக்கிளை நிறுத்தி மாட்டி கொண்ட துணியை எடுத்து கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் வந்த ஒருவர், அவரிடம் இந்த ரோட்டில் கொஞ்ச தூரம் பணப்பை ஒன்று உள்ளது, அது உங்களுடையது என கேட்டார்.
பின்னர் அங்கு சென்று பார்த்த போது, பணப்பை இருந்ததை எடுத்து கொண்டு வந்தார். அவர் திரும்பி வந்து சைக்கிளில் பார்த்த போது, பணப்பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே பதறி அடித்துக்கொண்டு அருகில் உள்ள திருவான்மயூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
English Summary
The thieves who worked nonsense in intellect