பொறியியல் கல்லூரி மாணவி மர்மமான முறையில் மரணம்! மரணத்தில் மர்மம் என குமுறும் பெற்றோர். - Seithipunal
Seithipunal


 பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில்  மூன்றாமாண்டு சிவில் இன்ஜினியரிங் படித்துவந்துள்ளார் காயத்ரி என்ற மாணவி.

விடுதியில் தங்கியிருந்த காயத்ரி காலையில்  அதே வளாகத்தில் உள்ள நர்சிங் மாணவிகள் தங்கியுள்ள மாணவியர் விடுதி கட்டிடத்தின் 3-வது மாடியிலிருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மாணவி காயத்ரி உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பினார்கள்.

ஆனால், காயத்ரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ள காயத்ரியின் பெற்றோர் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த காவல்துறையிடம் வலியுறுத்தியுள்ளனர். மாணவி காயத்ரியின் மர்மமான மரணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The student dies after falling from the terrace.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->