மனைவியை பாலியல் தொழிலுக்கு விற்ற கணவன்!. பல பெண்களை விற்றுள்ள அதிர்ச்சி சம்பவம்!. - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவருக்கும்  சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் கடந்த 2008-ஆம் ஆண்டு திருமணமாகியுள்ளது.

திருமணமனம் ஆன பின் மனைவியை சென்னைக்கு அழைத்து சென்று சிலம்பரசன் அவரது மனைவியை விபச்சார விடுதியில் தள்ளிவிட்டு, தனியாக வசித்து வந்துள்ளார். பின்னர் சென்னையைச் சேர்ந்த 27 வயது நிரம்பிய பெண்ணை கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்த சிலம்பரசன், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளனர்.

                     

இந்நிலையில் சேலம் மாவட்டம், சேத்துக்குழி, குட்டியாகவுண்டனுாரை சேர்ந்த முருகன் என்பவர், கொளத்துார் காவல்நிலையத்தில் சிலம்பரன் மீது புகார் கொடுத்துள்ளார். அதில், எங்களின், 17 வயது மகளை, சிலம்பரசன் கடத்திச்சென்றுவிட்டார். அவரை மீட்டுத்தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து போலீசார் சிலம்பரசனை பிடித்து விசாரணை நடத்தியதில், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, பெண்களை அழைத்துச்சென்று, ஹோட்டல் அறைகள் எடுத்து, பலாத்காரம் செய்து, சென்னையிலுள்ள விபசார விடுதிகளில் விற்று வந்தது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அவனை கைது செய்த பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The police arrested the young man who fell in love with the girls and sold them to a brothel.


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->