திருமணமானவருடன் ஏற்பட்ட காதல்!. இறுதியில் எரித்து கொலை செய்த கொடூர சம்பவம்!.
ராமநாதபுரத்தில் காதலியை எரித்துக் கொன்ற வழக்கில் குற்றவாளியை பொலிசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே உள்ளது ஆலங்குளம்.
இந்த ஊரைச்சேர்ந்தவர் விவசாயி வீரபாண்டி, இவரது மகள் மாலதி(வயது 20).
சென்னை கல்லூரியில் பி.ஏ. படித்துவிட்டு வேலை தேடிவந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 29–ந் தேதி ஊருக்கு வந்துவிட்டு சென்றவர் பற்றி விபரங்கள் தெரியவில்லை. போனும் சுவிட்ச் ஆப்பில் இருந்ததால் வீரபாண்டி காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதற்கிடையே கடந்த 13ம் தேதி கண்மாய் பகுதியில் பாதி எரிந்த நிலையில் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் சடலம் மாலதி என்பதும், அடிக்கடி சிவக்குமார் என்பவருடன் போனில் பேசி வந்ததும் கண்டயறியப்பட்டது.
அவரை பற்றிய விபரங்களை போலீசார் சேகரித்தபோது அவர் ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்பவர் என்பதும் ரெயிலில் சென்றபோது ஏற்பட்ட பழக்கத்தில் செல்போன் எண்களை பறிமாறிக்கொண்டு சென்னையில் ஒன்றாக பழகி வந்தது தெரிந்தது. திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தும் சிவக்குமார் அதை மறைத்து மாலதியுடன் பழகி வந்துள்ளார்.
இதை தெரிந்து கொண்ட மாலதி, ஊருக்கு வந்ததும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்தவர் கண்மாய் பகுதிக்கு அழைத்து சென்று எரித்துக் கொன்றது தெரியவந்தது.
இந்நிலையில் தற்போது தலைமறைவாகியுள்ள சிவக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். அச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
English Summary
The police are searching for the culprit in the case of burning the beloved in Ramanathapuram.