திருப்பதியை தொடந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கொண்டுவரப்பட்ட புதிய திட்டம்!
திருப்பதியை தொடந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கொண்டுவரப்பட்ட புதிய திட்டம்!
மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் முன்பை விட அதிகமாக காணப்படுவதால் சாமி தரிசனத்திற்காக 1 மணிநேரம் முதல் 2 மணிநேரம் காக்க வேண்டியுள்ளது. அப்போது குழந்தைகளின் பசியை போக்க இலவசமாக பசும் பால் வழங்க புது திட்டம்.
திருப்பதியில் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை என்றாலும், மீனாட்சி கோயிலில் பக்தர்கள் சில மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டியுள்ளதால், கை குழந்தைகளூடன் வரும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பசியால் அழும் குழந்தைகளுக்கு நடுவே பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவேண்டி இருப்பதால் தாய்மார்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.
இதை தீர்க்கும் வகையில், தினமும் 20 லிட்டர் பால் குழந்தைகளுக்காக கொடுக்கப்படையுள்ளது. தேவையென்றால் கூடுதலாக கொடுக்க தயாராக உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் தாய்மார்கள், தாய்ப்பால் கொடுக்க விரும்பினால் அருகிலேயே தாய்பால் புகட்டும் அறை அமைக்கயிருக்கிறது.
இந்த திட்டம் பகதர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
English Summary
the new project in madurai meenaksi amman temple