வாய்பேச முடியாத சிறுமியை அடித்து பலாத்காரம் செய்த கொடூரன் சிக்கினான்!. கொடூரனின் அதிர்ச்சி வாக்குமூலம்!. - Seithipunal
Seithipunal



சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே வாய் பேச முடியாத சிறுமியை பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அந்த சம்பவம்  நடந்த அன்று சிறுமியின் தந்தையும், தாயும் வெளியில் கூலி வேலைக்கு சென்றுவிட்டனர்.

வீட்டில் இவர் மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த கல்யாணி என்பவர் தனது தோட்டத்தில் மாடு மேய்க்க சென்றார். அப்போது சிறுமி, ரத்த காயங்களுடன் மேலாடை இல்லாமல் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினர் வரவழைத்ததோடு மட்டுமல்லாமல் இதுகுறித்து காவல்நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த பெயின்டர் மாணிக்கம் என்ற 27 வயதான நபரை பிடித்து விசாரித்தனர்.

இதுகுறித்து மாணிக்கம் அளித்த வாக்குமூலத்தில், நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த அந்த வாய் பேசமுடியாத சிறுமியை பலாத்காரம் செய்ய முடிவு செய்தேன்.

இதனால் அக்கம்பக்கத்தினர் வந்து விடுவார்களோ என்று அச்சமடைந்து, ஆசைக்கு இணங்காத அந்த சிறுமியை அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து தலையில் தாக்கினேன். பின் அவரை தோட்ட பகுதிக்கு தூக்கி சென்று பலாத்காரம் செய்தேன் என கூறியுள்ளார்.

இதனையடுத்து மாணிக்கத்தை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர். வாய்பேச முடியாத 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The murder of a 17-year-old unbearable girl has caused a shock.


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->