தனது இரண்டு பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட தாய்.! நடத்தையில் சந்தேகப் பட்டதால் எடுத்த விபரீத முடிவு.!!
தனது இரண்டு பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட தாய்.! நடத்தையில் சந்தேகப் பட்டதால் எடுத்த விபரீத முடிவு.!!
மதுரையைச் சேர்ந்த ஒரு பெண், தனது நடத்தையில் சந்தேகப் பட்டதால் தனது பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை டி.வி.எஸ்.நகர், சத்தியசாய் நகர், முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ராஜா. இவருக்கும், மைக்கேல் ஜீவா என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இது காதல் திருமணம் ஆகும். இவர்களுக்கு ஹரிதா, ஹரீஸ் கிஷோர்குமார் என்ற 2 குழந்தைகள் இருந்தனர்.
இந்நிலையில், ராஜா தனது மனைவிக்கும், வேறு ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் மனமுடைந்த மைக்கேல் ஜீவா தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார். தான் இறந்த பின்பு பிள்ளைகள் அனாதையாகி விடும் என நினைத்த அவர் தனது குழந்தைகளையும் கொள்ள முடிவு எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு மைக்கேல் ஜீவா, பிளாஸ்டிக் உறைகளால் தனது 2 குழந்தைகளின் முகத்தில் மூடியதால், மூச்சுத் திணறி குழந்தைகள் இறந்தன. அதன் பின்பு மைக்கேல் ஜீவா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தற்கொலை செய்வதற்கு முன்பு மைக்கேல் ஜீவா எழுதிய கடிதங்களை போலீசார் கைப்பற்றினர். அதில், எனக்கு யாருடனும் கள்ளத்தொடர்பு இல்லை. எனக்கு செய்த துரோகத்துக்கு நீ அனுபவிப்பாய், அதை நான் பார்க்கத் தான் போகிறேன். என்னை எவ்வளவோ கேவலப்படுத்தி இருக்கிறாய். என்னையும், என் குழந்தைகளையும் தவறாக பேசியதால் நொறுங்கி விட்டேன். இதுக்கெல்லாம் நீயும் சரி, உன் குடும்பமும் சரி அனுபவிப்பீங்க” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, தனது சகோதரிகள் ராணி, தீபா ஆகியோருக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில், “அனாதை போல் எங்களை கருதி எரித்து விடவும். என் கணவர் கொள்ளி போடக்கூடாது” என்றும் மைக்கேல் ஜீவா குறிப்பிட்டுள்ளார்.இந்த பரிதாப சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
English Summary
the mother who killed children also commited suicide