சிறுமியை கடத்த முயன்ற இளைஞர்! தர்ம அடி குடுத்த பொது மக்கள்!! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் சிறுமியை கடத்த முயன்றதாக இளைஞர் ஒருவரை பொதுமக்கள் கட்டிவைத்து தர்ம அடி அடித்துள்ளனர். திருப்பூர் சின்னாண்டி பாளையம், ராஜகணபதிநகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார், இவர்து மனைவி உமா. 

இவர்கள் பனியன் கம்பனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 10 வயது பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் இன்று காலை தனது மகளை அழைத்துக்கொண்டு உமா காட்டுப்பகுதிக்கு சென்றுயிருக்கிறார். 

அப்போது சிறுமி தனியாக நிற்பதை பார்த்த இளைஞர் ஒருவர் தூக்கிக்கொண்டு ஓடியுள்ளன. இதனை கண்ட உமா கூச்சலிட்டதும் அந்த இளைஞர் சிறுமியை கீழே வீசி விட்டு தப்பியோடி அருகில் இருந்த வீட்டிற்குள் ஒளிந்துகொண்டான். உமாவின் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள் வீட்டிற்குள் புகுந்து அந்த இளைஞரை இழுத்து வந்து கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி அடித்தனர். இதனையடுத்து சிலர் மத்திய காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். 

இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வந்த காவல் துறையிடம் அந்த நபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த மத்திய காவல் துறையினர் அந்த இளைஞரிடம் விசாரண நடத்திவருகின்றனர். மேலும் இளைஞரின் பாக்கெட்டில் அடையாள அட்டை இருப்பதையும் கண்டறிந்தனர். அதில் அவரது பெயர் சிவா என்பதும் அவர் கே.வி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறை சிறுமியை ஏன் தூக்கி சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the male who to tried to kidnap the girl


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->