காவல் நிலையம் அருகே, மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்!. அதிர்ச்சி சம்பவம்!. - Seithipunal
Seithipunal



ராஜபாளையத்தை  அருகே தெற்குவெங்காநல்லூரைச் சேர்ந்த மதீஸ்வரன் என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பிரியா என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்ளும் நிலைப்பாடு ஏற்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து ஒரு கட்டத்தில் தகராறு முற்றிய நிலையில், மனைவியை அரிவாளால் சரமாரியாக மதீஸ்வரன் தாக்கியுள்ளார். ராஜபாளையம் காவல்நிலையம் அருகிலேயே இந்த கொடுமை சம்பவம் நடந்துள்ளது.

அரிவாளால் சரமாரியாக தாக்கப்பட்டதில் பிரியா பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். இதையடுத்து பொதுமக்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

உயிருக்கு போராடி வரும் பிரியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையிலேயே நடைபெற்ற இந்த சம்பவத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மதீஸ்வரனை கைது செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The husband was the victim of the brutal murder.


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->