தெரியாத நபரை வாட்சப்பில் தொடர்புகொண்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! - Seithipunal
Seithipunal


சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த மாணவி திவ்யா 9 வகுப்பு பயின்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரது பெற்றோர் மாணவிக்கு ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கித்தந்தனர். அப்போதிலிருந்து மாணவி திவ்யா சரிவர படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். ஒருநாள் அவரது செல்போனுக்கு ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அவர் அந்த அழைப்பை எடுத்து பேசியபோது, ஒரு இளைஞர் தவறாக கால் செய்துவிட்டேன் என கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.

இதையடுத்து, அந்த மாணவி தனக்கு யார் கால் செய்தது என்று அறிய வாட்சப்பில் அந்த நபரை தொடர்பு கொண்டுள்ளார். அந்த இளைஞர் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவை சேர்ந்த மோகன் என்பது அந்த மாணவிக்கு தெரிய வந்தது. பின்னர் இருவரும் வாட்சப்பில் பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த மாணவி வாட்சப்பில் அந்த இளைஞருடன் பேசாமல் இருக்க முடியவில்லை. இதனால் அவர் படிப்பில் கவனம் செலுத்தாமல் அந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அந்த மாணவியை சந்திக்க மோகன், சென்னையில் உள்ள தனது நண்பர் விஜய் உதவியுடன் ராயபுரம் வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை சந்தித்த மோகன், உன்னை கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வதாக கூறி அந்த சிறுமியின் மனதை மாற்றியுள்ளார். பின்னர் அந்த சிறுமியை திருவள்ளூரில் உள்ள விஜயின் வீட்டிற்கு அழைத்து சென்று இருவரும் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மீண்டும் சென்னையில் விட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, அதிர்ந்துபோன அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் மோகனையும், விஜயையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதேபோன்று சென்னையில் சப் இன்ஸ்பெக்டரின் மகன் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The horror of the little girl who contacted the unknown person in the watch!


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->