நிறைமாத கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்த அரசு பேருந்து ஓட்டுநர்!. கோபமடைந்த சக பயணிகள்!. - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் நிறைமாத கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்துள்ளார். பேருந்து நிறுத்தத்தில் பத்மாவதி என்ற நிறைமாத கர்ப்பிணி இறங்குவதற்கு முன் பேருந்தை நகர்த்தியதில் அவர் தடுமாறியுள்ளார்.

இதற்காக ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பத்மாவதியை ஓட்டுனர் சின்னசாமி எட்டி உதைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதைபார்த்த கர்ப்பிணியின் உறவினர்களும், சக பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

             

ஒரு கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல் தாக்கிய அந்த ஓட்டுநருக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டனர். உடனடியாக ஏனைய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் விரைந்து சென்று உறவினர்களையும், பயணிகளையும் சமாதானம் செய்தனர்.

              

அதற்குள் கர்ப்பிணியை தாக்கியதாக கூறப்படும் ஓட்டுநர் அந்த கர்ப்பிணி பெண்ணை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மற்றும் பயணிகள் அந்த அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பத்மாவதி கொடுத்த புகாரின் அடிப்படையில் நகர பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The government bus driver kicked off the pregnant woman


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->