காதலி பேசுவதை நிறுத்தியதால்! காதலன் செய்த செயல்!! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு வனப்பகுதியில் இளம் பெண் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல் துறை காதலன் உட்பட மூன்று பேரை கைது செய்தனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள வனப்பகுதியில் எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், இளம்பெண் ஒருவரின் சடலம் கிடந்தது. கடந்த 28-ம் தேதியன்று இதை பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடலை மீட்டு நடத்தப்பட்ட சோதனையில், அது இளம் பெண்ணின் உடல் என்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்தனர். 

எரித்துக் கொலை செய்யப்பட்ட அந்த இளம்பெண், கேரளாவில் மாயமான கல்லூரி மாணவி ஜெஸ்னா மரியாவா என்பது குறித்தும் காவல் துறை விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அப்பெண் சென்னை அண்ணாநகரை சேர்ந்த பொக்கிஷமேரி என்பதும், அவர் கொலை செய்யப்பட்டதும் காவல் துறை விசாரணையில் தெரிந்தது.

இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல் துறை, பொக்கிஷமேரியைக் கொலை செய்ததாக அப்பெண்ணின் காதலர் பாலா என்பவரையும், கொலை உதவியதாக அவரது நண்பர் சுகுமார் என்பவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

காவல் துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கடந்த 8 ஆண்டுகளாக பாலாவும், பொக்கிஷமேரியும் காதலித்து வந்ததாகவும், பொக்கிஷமேரி திடீரென பேசுவதை தவிர்த்து வந்ததால் ஏற்பட்ட தகராறில் அவரை பாலா கொலை செய்ததாகவும் தெரிந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the girlfriend stopped speaking


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->