இந்த செட்டாப் பாக்சுகளை மட்டும் பயன்படுத்தவேண்டும்., என மிரட்டிய திமுக எம்எல்ஏ!. போராட்டத்தில் குதித்த கேபிள் டிவி ஆபரேட்டர்கள்!.
மக்களை மிரட்டியதாக திமுக எம்எல்ஏ மீது புகார்.
வேலூரில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் செட்டாப் பாக்சுகளை பொருத்தச் சொல்லி திமுக எம்.எல்.ஏ. காந்தி மிரட்டுவதாக கூறி தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் பொதுநலச் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் சத்துவாச்சாரியில் உள்ள ஆட்சியர் அலுவலகம் எதிரே இந்த போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய கேபிள்டிவி ஆப்ரேட்டர்கள், தங்களை சுமங்கலி கேபிள் விஷன் என்ற தனியார் செட்டாப் பாக்சுக்கு மாறுமாறு கூறி ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் காந்தி மிரட்டுவதாக குற்றம்சாட்டினர்.
இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தை என்றும் அவர்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது. அங்கு ஏராளமானே கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் பொதுநலச் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் எம்.எல்.ஏ காந்தி சுமங்கலி கேபிள் விஷனின் செட் டாப் பாக்சை கேபிள் ஆபரேட்டர்களுக்கு வழங்கும் புகைபடங்களும் ஆதாரமாக வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தையும் சமூககவலைத்தளங்களில் பரப்பிவருகின்றனர்.
ஆனால் இந்த புகார் பற்றி அவர் கூறுகையில் அவர் தான் இது போன்று யாரையும் மிரட்டவில்லை என்று மறுத்துள்ளார். இந்த சம்பவத்தால் வேலூரில் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
The DMK complains about the MLA threatens people.