சிலிண்டர் வெடித்ததில் 3 வீடுகள் தீயில் எரிந்து சாம்பல்!. 6 உயிர்கள் கருகி மரணம்!. - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நல்லம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் 55 வயது நிரம்பிய இவர் விவசாயவேளை செய்துவந்துள்ளார்.

 பெருமாளின் மனைவி சிவகாந்தி நேற்று முன்தினம் இரவு  எரிவாயு அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருந்தார். இந்த நிலையில் திடீரென கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறியது. 

சமயலின்போது, சமையலறையில் இருந்து சிவகாந்தி வெளியே வந்து நின்றதால் உடனடியாக சிவகாந்தி வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தார். அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். 

சிலிண்டர் வெடித்து பற்றி எரிந்த தீ, கூரை வீட்டின் மீது பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. அப்போது அந்த பகுதியில் பலத்த காற்று வீசியதால் பெருமாள் வீட்டில் பற்றி எரிந்த தீ, அருகில் இருந்த இருவரின் வீடுகள் மற்றும் 2 வைக்கோல் போருக்கும் பரவி அவைகளும் தீப்பிடித்து எரிந்தன.

இதனையடுத்து தீ விபத்து பற்றி தகவல் அறிந்த, மரக்காணம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடியே அவர்களால் தீயை முழுவதும் அணைக்க முடிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. 

இதில் 3 பேரின் வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும் பெருமாள் வீட்டின் அருகே கட்டி வைத்திருந்த 6 ஆடுகள் தீயில் கருகி இறந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ரூபாய் 5 லட்சம் மதிப்பிற்கு மேலாக சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The cylinder exploded and crumbled 3 roofs of houses were burned on fire.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->