காதல் திருமணம் நடந்து 8 நாட்கள் பிறகு நடந்த கொடுமை! - Seithipunal
Seithipunal


மதுரை சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 28). இவர் கால் டாக்சி கம்பெனி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் மீனா (வயது 22).
    
இருவரும் ஒரே தெருவைச் சேர்ந்தவர்கள். சில ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். ஆரம்பத்தில், இவர்களது காதலை எதிர்த்த அவர்களது பெற்றோர், பின், சம்மதித்து, ஆறு மாதங்களுக்கு முன்பாக, இருவருக்கும் திருமண ஏற்பாடுகள்  நடைபெற்றன.
    
இதற்கிடையே, இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே, திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால், நடக்க இருந்த திருமணம் நின்று போனது.
    
மீனாவிற்கு, வேறு ஒரு இடத்தில், மாப்பிள்ளை பார்த்து வந்தனர், அவரது பெற்றோர். இதனால், காதலர்கள் இருவரும், கடந்த 15-ஆம் தேதி, வீட்டை விட்டு வெளியேறி, திருச்செந்துார் சென்று, அங்கு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
    
திருமணம் முடிந்த பின், இருவரும் மதுரைக்கு வந்து, குடித்தனம் நடத்தினர். இதனால், மீனாவின் மீது, அவரது குடும்பத்தினர், கடும் கோபம் அடைந்தனர்.
    
இந்த நிலையில், நேற்று அதிகாலை, பொன்ராஜ், தன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென, மீனாவின் அண்ணன் வீட்டிற்குள் நுழைந்தார். படுத்திருந்த பொன்ராஜை, தன் கையில் வைத்திருந்த அரிவாளால் சராமரியாக வெட்டினார்.
    
இதனைத் தடுக்க வந்த பொன்ராஜின் தாயார் மீனாட்சிக்கும், அரிவாள் வெட்டு விழுந்தது. பின், பிரபு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். அரிவாளால் வெட்டுப்பட்ட, அந்த இருவரையும், மீனாவும், அருகில் இருந்தவர்களும் சேர்ந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
    
தெப்பக்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தப்பி ஓடிய பிரபுவைத் தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the cruelty after 8 days of love marriage


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->