பெற்ற மகளை நாசம் செய்த கொடூர தந்தை!. அதிர்ச்சி சம்பவம்!. தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!. - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் எபிநேசன் துரைராஜ். 44 வயது நிரம்பிய இவருக்கு திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்னையில் கருத்துவேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அவரின் மூத்த மகளை அவரது மனைவி அழைத்துசென்றுள்ளார்.

13 வயதான இரண்டாவது மகளை எபிநேசன் துரைராஜ் வளர்த்துவந்துள்ளார். கடந்த வருடம் அவரது 13 வயது மகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில் இந்த தகவல் சைல்டுலைன் அமைப்பின் கவனத்துக்குத் தெரியவந்தது. பிறந்த குழந்தையை சேலம் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டனர்.

இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்ததில் அவரது தந்தை எபிநேசன் துரைராஜ் பல முறை  பலாத்காரம் செய்ததில் அந்த சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் எபிநேசன் துரைராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஒவ்வொரு பிரிவின் கீழும் தலா ஒரு ஆயுள் தண்டனை வீதம் மொத்தம் 3 ஆயுள் தண்டனைகளும், தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்தத்தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The court ruled that the father was sentenced to life imprisonment for 3 years in Tirupur district.


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->